Tuesday 5 February 2013

திருமுருக கிருபானந்த வாரியார் - வாழ்க்கை வரலாறு

திருமுருக கிருபானந்த வாரியார் - வாழ்க்கை வரலாறு

திருமுருக கிருபானந்த வாரியார்

உ. தாமரைச்செல்வி


தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.

பிறப்பும் கல்வியும்:

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்.

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.

சொற்பொழிவாளர்:

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். (தேனி வரசித்தி விநாயகர் பேட்டை நவராத்திரித் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.)

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

பெண்களை மதித்தவர்:

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது” என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.

பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். “மலரினும் மெல்லிது காமம்” புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

“தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.”

தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.

முருகப் பெருமான்:

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். “ஆண்பிள்ளை” அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

குழந்தைப் பற்று:

வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.

இசைப்பயிற்சி:

இவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.

இசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி”

வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,

“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”

என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார்? சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.

சைவ சித்தாந்தம்:

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

இசுலாமியர் கருத்து:

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.

Tuesday 29 January 2013

"வாரியார் வாழ்க்கை வரலாறு" வடலூர் திருப்பணி

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

அச்சிட அச்சிட
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1906 – 1993) எழுதுகிறார்:
அச்சுத்தவறில் ஆண்டவன் திருவுளம்
1936 இல் வயலூர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஹிந்துப் பத்திரிகையில் அதனை வடலூர் திருப்பணி என தவறாக வெளியிட்டு விட்டார்கள். இதனைப் பார்த்த திருச்சிராப்பள்ளி எனது ஆப்த நண்பர் முனிசிபல் மானேஜர் திரு.வி.எச்.லோகநாதபிள்ளை அவர்கள் “ஐயா வடலூர் திருப்பணியை நீங்கள்தான் செய்யப் போகின்றீர்கள்” என்று என்னைப் பார்த்துக் கூறினார். நான் வடலூர்த் திருப்பணியைப் பற்றி சிந்திக்காத காலம். அது நம்மால் ஆகக் கூடிய காரியமா என்று கேட்டேன்.
வடலூரில் வள்ளலார் சுவாமிகள் மூன்று நிறுவனங்கள் அமைத்தார்கள். உடம்பு தழைக்க சத்திய தர்மசாலையும் உணர்வு தழைக்க சத்திய வேதபாடசாலையும், உயிர் தழைக்க சத்திய ஞான சபையும் நிறுவினார்கள். இவற்றுள் சத்திய ஞான சபை பழுதடைந்துவிட்டது. பாலாலயம் செய்து பல ஆண்டுகளாக யாரும் திருப்பணியை மேற்கொள்ளாமல் சத்திய ஞானசபை பழுதுற்றுக் கிடந்தது, பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மற்றும் பலர் முயன்றும் திருப்பணி நடக்கவில்லை. கடலூர் ஜில்லா போர்டு தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் தலைமையில் ஒரு திருப்பணி குழு அமைக்கப்பெற்றது. இடையில் அமாவாசைப் பரதேசி அவர்கள் “நான் திருப்பணி செய்வேன்” என்று சிறிது வசூல் செய்து செப்புத்தகடுகள் வாங்கி ஒரு சிறிது பணி செய்யத் தொடங்கினார். திருப்பணிக் குழுவினரிடம் வசூல் செய்த கணக்குத் தரமறுத்தார். அதனால் அத்துடன் அது நின்றுவிட்டது.
தொடக்க தடங்கல்கள்
அப்போதுதான் லோகநாதப்பிள்ளை என்னைப் பார்த்து “ஐயா! வடலூரில் திருப்பணி தொடங்கி இருக்கிறார்கள். நாம் ஏதாவது அதில் ஈடுபடவேண்டும்” என்று சொன்னார். நானும் அவரும் மதுரையில் ஞாயிறு தோறும் வசூல் செய்தோம். திருப்பணிக்குப் பணம் கொடுத்து வாருங்கள் என்று என்னை வடலூருக்கு அனுப்பினார். 700 ரூபாய் எடுத்துக்கொண்டு வடலூருக்குச் சென்றேன். அங்கு சத்திய ஞானசபையைப் பூசனை செய்யும் சிவஸ்ரீ பாலசுப்ரமண்ய சிவாச்சாரியாரைக் கண்டு அவரிடம் தங்கினேன். பின்னலூர் வாகீசம்பிள்ளை அவர்களின் தந்தையார் திரு கணபதிப்பிள்ளையும் அங்கு வந்திருந்தார். நான் சிவாச்சாரியாரிடம் “திருப்பணிக்கு பணம் கொண்டு வந்திருக்கிறேன்.” என்று சொன்னேன். குருக்கள் “யாரும் இங்கு பொறுப்பாக இருந்து திருப்பணி செய்வாரில்லை. கணபதியாப் பிள்ளை என்ற இவர் சிறந்த அறப்பெருஞ் செல்வர் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் இவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று கூறினார்.
நான் அதுபடியே கணபதியாப் பிள்ளையிடம் ரூபாய் 700 கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றேன். இவ்வாறு மாதந்தோறும் 700 ,800 என்று எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்து வந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சாரியாரின் மேற்பார்வையில் 3000 ரூபாய் செலவில் ஜோதி மேடைக்குத் தூண்கள் செய்யப்பட்டன. மதுரையிலிருந்து லோகநாதப்பிள்ளை ஒரு எஞ்சினீயரை அனுப்பி திருப்பணிகளைப் பார்வையிட வைத்தார். அந்த எஞ்சினீயர் செய்த தூண் பாரம் தாங்காது என்று சொல்லிவிட்டார். அதனால் செய்த வேலைகள் வீணாகிவிட்டன…. திருப்பணிக்குழுத் தலைவர் பொறுப்பாக ஒருவர் திருப்பணிகளை மேற்பார்வையிட வேண்டுமென்று திருப்பணிக்குழுத் தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் சொல்லி என்னிடம் “நீங்களே பொறுப்பாக இருந்து செய்யுங்கள். ஆனால் திருப்பணிக் குழுவுக்கு உட்பட்டுச் செய்யுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். நான் “சரி” என்று திருப்பணியை முழுப் பொறுப்பாக ஏற்றுச்செய்ய மேற்கொண்டேன். சிற்பவல்லுனர் துறையூர் நா.சௌந்திரபாண்டியப் பிள்ளை அவர்களை ஸ்தபதியாக நியமனம் செய்து பல கொத்தனார்களை அழைத்து சமையல் முதலிய ஏற்பாடுகள் அமைத்துத் திருப்பணி நடைபெறச் செய்தேன்…. ஈரோடு வள்ளல் விவிசிஆர் முருகேச முதலியார் பலமுறை ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தார். அவ்வாறே நாகப்பட்டினம் பச்சைமுத்து நாடாரும் பலமுறை ஆயிரம் ஆயிரமாகத் தந்தார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் திருப்பணி நடந்தது.
கணக்கும் வழக்கும்
அறநிலையத்துறை ஆட்சிக்குழுவிலிருந்த ஒரு அதிகாரிக்கும் வேலைபார்க்கும் சௌந்திரபாண்டியப் பிள்ளைக்கும் மனவேறுபாடு உண்டாயிற்று. அவர் திருப்பணிக்குழுவைக் கலைத்துவிட்டார்.அறநிலைய ஆட்சிக்குழுவினர் திருப்பணியை நிறுத்திவைக்குமாறு ஆணை பிறப்பித்தார்கள். திருப்பணி நின்றுவிட்டது. எனக்கு மிகுந்த மனவேதனை உண்டாயிற்று. அன்பர் விவிசிஆர் முருகேச முதலியாரும் மன்னார்குடி சாமிநாத முதலியாரும் திருப்பணி நின்றிருப்பதை அறிந்து அப்போது இந்து அறநிலையத் துறை ஆணையராக இருந்த சின்னைய்யா பிள்ளையிடம் “வடலூர் திருப்பணியை வாரியார் சுவாமிகள் செய்வது மிகவும் நல்லது. அவர் வழிபாட்டில் கண்ணீர் வடித்தால் உங்களுக்கு இருபத்தொன்று தலைமுறை ஆகாது. ஆதலால் திருப்பணியை அவரிடமே ஒப்புவித்து திருப்பணி செய்ய உதவி செய்யுங்கள்” என்று கூறினார். பழனியில் சின்னைய்யாபிள்ளை என்னை சந்தித்து வடலூர் திருப்பணி கணக்குகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரினார். ஒரு ஆளை நியமித்து ஆறுமாதம் அந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்தார். இரண்டு லட்ச ரூபாய் திருப்பணி கணக்குகளை அவர் தணிக்கை செய்தார். பயணச்செலவு கணக்கு அதில் இல்லவே இல்லை. அவர் மகிழ்ந்து மீண்டும் என்னிடம் கணக்கை கொடுத்து “நீங்களே திருப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
திருவருளும் மண்ணெண்ணையும்
வடலூர் திருப்பணி நடந்துவரும் பொழுது ஒருமாதம் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமின்றி நான் அணிந்திருந்த அணிகலன்களை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். தெம்மூரில் ஒரு விரிவுரைக்கு ஏற்பாடாகியிருந்தது. அதனை தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். அன்று பெரும் மழை எங்கும் வெள்ளக்காடு என்றாலும் வைக்கோல் பரப்பி தென்னங்கீற்று போட்டு மக்கள் அமர ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று இரவு வள்ளலாரைக் குறித்து விரிவுரை செய்தேன். விரிவுரை முடிந்தது. தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளையும் அவர் மனைவியாரும் ஒரு பெரிய வெள்ளித்தட்டில் 25 சாத்துக்குடி ஆரஞ்சு பழங்கள் ஏழெட்டு வாழைப்பழச் சீப்புகள் ஆகியவற்றை வைத்து அதன் மேல் 100 ரூபாய் நோட்டுகள் கற்றையாக அவைத்திருந்தார்கள். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ரசீது போடும் பொருட்டு பணத்தை எண்ணிப் பார்த்தேன். நூறு ரூபாய் நோட்டுக்கள் 35 உருந்தன. நான் நகைகளை அடகுவைத்துக் கடன் வாங்கியிருந்த தொகை 3500. தெம்மூர் பிள்ளை நன்கொடை கொடுத்ததும் 3500. அதே தொகையை அன்பர் வழங்கியிருக்கிறார். மூவாயிரமாகவோ நாலாயிரமாகவோ கொடுக்காமல் மூவாயிரத்தைந்நூறே கொடுக்குமாறு செய்த திருவருளின் திறத்தை நினைந்து வியந்தேன்.
… நன்கொடைக்காக, பண்ருட்டி சைக்கிள் ஷாப் ஆர்.கே.முருகேசநாயுடு அவர்கள் தனக்கிருந்த ஒரே ஒரு வீட்டை விற்று 1008 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்… ஒருமுறை அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் சின்னையாபிள்ளை சுமுகம் இன்றி வெடு வெடு என்று பேசினார். நான் இது பொதுக்காரியம். பொதுஜனங்களிடம் காரியசித்திக்கு மருந்து மௌனம் ஒன்றேயாகும் என்று சும்மா இருந்தேன். … எனது தாய்மாமா PWD அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிவகுரு முதலியார் திருப்பணி தொடக்கத்திலிருந்து இத்திருப்பணியில் உடனிருந்து உழைத்து வந்தார். மண்ணெண்ணெய் பாட்டில் வடலூரில் மூன்று அணா. குறிஞ்சிப் பாடியில் இரண்டரை அணா. இந்த அரையணா லாபத்துக்காக வடலூரிலிருந்து குறிஞ்சிபாடிக்கு மூன்றுமைல் நடந்து போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவார்.
…”வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன். 24-5-1950 தமிழ் வருடம் விக்ருதி சித்திரை 12தியதியன்று கும்பாபிஷேகமென்று உறுதி செய்து பத்திரிகை அச்சிட்டேன்.
கொத்தன் கும்பாபிஷேக நாள் குறிக்கலாமா?
வடலூர் அறநிலையங்களின் அறங்காவலர்கள் மூவரும் அறநிலைய ஆட்சித்துறை கோர்ட்டில் கும்பாபிஷேகம் செய்யக்கூடாதென்று வழக்குத் தொடர்ந்திருந்தார்கள்…. நான் அறநிலைய ஆட்சித்துறை அலுவலத்திற்கு சென்றேன். தலைமை ஆணையர் சின்னைய்யாபிள்ளை “நாளைக்குத்தானே வழக்கு நாளை வாருங்கள்” என்றார். மற்றொரு ஆணையர் மண்ணாடி நாயர் “உத்தமமான தொண்டு செய்யும் உங்களை இப்படி வழக்கு போட்டு தொந்தரவு செய்கிறார்களே” என்று வருந்தினார். மற்றொரு ஆணையரான கஜபதி நாயக்கரை சென்று பார்த்து “வணக்கம்” என்றேன். அவர் என்னைப் பார்த்து முகத்தைச் சுளித்து “நீர் ரொம்ப டிரபிள் கொடுக்கிறீரே” என்றார். நான் மௌனமாக இருந்தேன். அவர் சிரித்து என்ன நான் சொன்னதற்கு ஒன்றும் மறுமொழியை காணோமே என்றார். அவர் “ஞானசபைகளைக் கட்டினீர். டிரஸ்டிகளைக் கேட்டுத்தானே கும்பாபிஷேகத் தேதிகளை நிர்ணயிக்க வேண்டும். கொத்தனார் வீட்டைக் கட்டினால் கட்டிய கொத்தன் வீட்டுக்காரரை கேட்காமல் கிரகபிரவேச தேதியை வைக்கலாமா?” என்று கேட்டார். அவர் சொன்ன உவமை பொருந்தாது. வீடு ஒருவனுக்கு சொந்தமான ஒன்று. ஞானசபை யாருக்கும் சொந்தமானதன்று. கொத்தன் கூலிக்கு வேலை செய்பவன் நான் பயன்கருதாது பணிபுரிபவன். எடுத்து விளக்கினால் விவாதம் விளையும் ஆதலால் நாளைக்கு வருவேன் என்று மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்.
குடநீராட்டும் தங்கக்கலசமும்: கொள்கையா குத்தகையா?
மறுநாள் ஆணையர் அறங்காவலரைப் பார்த்து உங்கள் வழக்கு என்ன என்று வினவ அவர்கள் “சத்தியஞான சபையில் ராமலிங்கசுவாமிகள் தங்கக்கலசம் வைக்கவில்லை; வாரியார் நூதனமாக வைத்துவிட்டார். இது பெரும்பிழை” என்று கூறினார்கள். ஆணையர் என்னைப் பார்த்தார், “வள்ளலார் ஞானசபை கட்டும் போது இவர்கள் உடன் இருந்திருப்பார்கள். அப்போது நான் இல்லை. ஆனால் ஞானசபையில் முன்பு இருந்த தங்கக்கலசத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன், அழித்துவிடவில்லை. நான் முன் இருந்தது போலத்தானே திருப்பணி செய்ய வேண்டும்? அதைப் போலத்தான் இப்போது முன்பிருந்த கலசத்தை விட சிறிது அழகாக செய்திருக்கிறேன். நீங்கள் வடலூர் வரும் போது பழைய கலசத்தை காட்டுவேன்” என்றேன்.
சின்னையா பிள்ளை அதிர்ச்சி அடைந்தார், “அப்படியா? பழைய கலசம் இருக்கிறதா? நீங்கள் கலசமே இல்லை என்றீர்களே ” என்றார். ஆணையர் அறங்காவலர்களை நோக்கி “கலசம் விவகாரம் முடிந்தது. கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறீர்களே, வேறு காரணங்கள் உண்டா?” என்று கேட்டார். “வள்ளலார் கொள்கைக்கு மாறாக இவர் கும்பாபிஷேகம் செய்வதை நாங்கள் தடுக்கிறோம்.” என்று கூறினார்கள்.
vadalur_sabhaiநான் வள்ளலாருடைய கொள்கைக்கு மாறானவன் இல்லை. எனக்கும் வள்ளலார் கொள்கை நன்கு தெரியும். சத்திய ஞானசபை உருவம் இல்லாத ஜோதி வழிபாட்டை உடையது. மேட்டுக்குப்பத்திலிருந்து பாபஹர தீர்த்தத்தை குடத்தில் கொணர்ந்து ஞானசபையில் வைத்து எல்லா அன்பர்களும் சேர்ந்து ஆறுவேளை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து அந்தத் தீர்த்தத்தை எடுத்து ஸ்தூபிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஏற்பாடு” என்றேன். இது நல்ல ஏற்பாடு என்றார் சின்னையா பிள்ளை. கஜபதி நாயக்கர் குறுக்கிட்டு “ஸ்தூபி நீராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஜோதி வழிபாடு மட்டும் போதும்” என்று ஓங்கியடித்து கூறினார். “நான் நாகப்பட்டினம் மரக்கடை அ.மு.சுப்பராய செட்டியாரின் உபயமாக 48 தோலா செலவில் தங்கமுலாம் கலசம் செய்வித்தேன். கலசத்துக்கு முலாம் இட்டவர் இஸ்லாமிய அன்பர். கும்பாபிஷேகத்தின் போது லட்சோப லட்சம் ஜனங்கள் சேருவார்கள். ஜோதிவழிபாட்டை அனைவரும் ஏககாலத்தில் தரிசிக்க முடியாது. ஸ்தூப நீராட்டு செய்தால்தான் அனைவரும் ஏககாலத்தில் தரிசித்து தரிசனம் செய்தோம் எனும் நிறைவை பெறுவார்கள்” என்றேன்.
சின்னையா பிள்ளை இதைக் கேட்டு “அய்யா சொல்லுவது சரிதான்.” என்று சொல்லி கஜபதி நாயக்கரின் தொடையை ஒரு தட்டு தட்டி “நீர் சும்மா இரும்” என்றார்…. அறங்காவலர்கள் “கும்பாபிஷேகத் தேதி நெருக்கமாக இருக்கிறது கடைகளை ஏலம் விட போதுமான அவகாசம் இல்லை” என்றார்கள். சின்னையாபிள்ளை அவர்களை பார்த்து “கும்பாபிஷேகம் வாரியார் நடத்துகிறார். உங்களுக்கு கடுகளவு செலவில்லை. கடைகளை ஏலம்போடுவதில் சிறிது பணம் வந்தாலும் பிரச்சனையில்லை. வாரியாருடன் ஒத்துழையுங்கள்” என்றார்.
மீண்டும் தடங்கல்
ஏப்ரலில் சின்னையாபிள்ளை வடலூர் வருவதற்கு முன் அவர் மனம் மீண்டும் மாறியிருந்தது. வடலூரில் ஒரு கூட்டம். அங்கு என்னைப் பார்த்து “மக்களுக்கு கும்பாபிஷேகத்தில் விருப்பம் இல்லை போல தெரிகிறது, எனவே வேண்டாம்” என்று சொன்னார். நான் விசனத்துடன் அமர்ந்திருந்தேன். சின்னையா பிள்ளை புறப்பட்டார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் கக்கத்தில் கம்பை வைத்துக்கொண்டு அவரை எதிர்த்து நிமிர்ந்து நின்று “எஜமான்! வாரியார் செய்தால் ஒரு சொம்புதான் மேலே ஏறும். மறுத்தால் 1000 சொம்புகள் மேலே ஏறி ஸ்தூபிக்கு நீராட்டு நடக்கும். எஜமானுக்கு எச்சரிக்கை செய்கிறேன்” என்றான்.
அவர் அதைக் கேட்டு அஞ்சிய முகத்துடன் காரில் ஏறி சென்றார். எழுத்து முகமாக எனக்கு நீராட்டு செய்ய வேண்டாம் என கமிஷனருடைய கடிதம் வந்திருந்தது. நான் புறப்பட்டு ஓ.பி. ராமசாமி ரெட்டியாரைச் சென்று பார்த்தேன். … நான் எனக்குள் எண்ணிக்கொண்டேன். நான் அருணகிரிநாதருடைய பக்தன். …ராமலிங்க வள்ளலார் சிறந்த ஞானமூர்த்தி. அவருடைய பக்தர்கள் சிலருக்கு விருப்பமில்லாத விஷயத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்?
வடலூரில் ராமலிங்க வள்ளலாருக்கு நாங்கள் தான் வாரிசு என சொல்லிக்கொள்ளும் முக்கியமான சிலரை அழைத்து “உங்கள் இஷ்டப்படி செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு பெரும் திகைப்பு ஏற்பட்டது. எல்லாரும் ஒன்றுகூடிப் பேசி என்னிடம் வந்தார்கள். “நீங்கள் 9 வருஷம் இந்த சபைக்காக இரவுபகலாக உழைத்து சபையைக் கட்டியிருக்கிறீர்கள். உங்கள் மனம் நோவ நாங்கள் நடக்கக் கூடாது. இந்த சத்திய ஞானசபையின் அமைப்பு வேறு எங்கும் இல்லாதது. தமிழருக்கே உள்ள தனிப்பெருஞ்சிறப்பு உடையது ஆதலால் ஸ்தூபி நீராட்டும் பணியை குருக்களுக்கு பதில் நீங்களே செய்ய வேண்டும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.
நான் “இத்தனைக் காலம் குருக்கள்தான் பூஜை செய்து கொண்டு வருகிறார். கும்பாபிஷேகத்துக்கு அவரை விலக்கிவிட்டு நான் செய்வது பொருத்தமாகாது. இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று கூறினேன். அன்று இரவு முழுவதும் அவர்களுக்கும் எனக்கும் தூது நடந்தது. அன்று இரவு ஒரு சிறிதும் கண் இமை பொருந்தவில்லை. கடையாக குருக்கள் உடன் வர மேட்டுக்குப்பத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவலை ஓதி குருக்களே நீராட்டுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கும்பாபிஷேகமும் வழக்கும்
24-4-1950 காலை 9 மணிக்கு ஓ.பி. ராமசாமி ரெட்டியாருடைய தலைமையில் ஞானசபை அர்ச்சகராகிய பாலசுப்ரமண்ய சிவாச்சாரியாரின் புதல்வர் ஸ்ரீசபேச சிவாச்சாரியார் ஸ்தூபிக்கு நீராட்டினார். அறங்காவலர்கள் கும்பாபிஷேகத்தை நிறுத்தவேண்டுமென்று இஞ்சங்ஷன் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்களாம். காவல்துறையினர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தங்கியிருக்கிற இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கும்பாபிஷேகத்தை செய்யக்கூடாது என்ற உத்தரவைக் கண்டதும் ரெட்டியார் ரௌத்திராத்காரமாகச் சீறி “இது அரசாங்கமா? தனிப்பட்ட ஒருவர் இத்துணைப் பெரிய மகா கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக கும்பாபிஷேகத்தை நிறுத்துவதா? இது அக்கிரமம் பேசாமல் போங்கள்” என்று சத்தமிட்டாராம். காவல்துறையினர் கும்பாபிஷேகத்தை நிறுத்தாமல் பேசாமல் இருந்துவிட்டார்கள். இந்த தகவலை ரெட்டியார் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு தெரிவித்தார்கள்.கும்பாபிஷேகம் முடிந்து நானும் ரெட்டியாரும் பிரசங்க மேடைக்கு வந்தோம். எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது.
அவர் நாண நன்னயம்
வாரியார் பூஜை
வாரியார் பூஜை
சென்னைக்குச் சென்ற போது ஸ்தூபி நீராட்டு மலர், ஞானசபைப் படம், திருநீற்றுப்பை இவைகளை எடுத்துக் கொண்டு போய் இந்து அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் சின்னையாபிள்ளையிடம் கொடுத்து “வடலூர் திருப்பணிக்கு கும்பாபிஷேகத்துக்கு தாங்கள் செய்த உதவிக்கு என்றும் நன்றி என்று கூறினேன். அவர் நாணத்துடன் “நான் ஒரு உதவியும் செய்யவில்லையே! இடையூறுதானே செய்தேன்!” என்று கூறினார்.
வடலூர் சத்தியஞானசபை திருப்பணி வரவு செலவு அறிக்கைகளை 400 பக்கத்தில் அச்சிட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கினேன். ஒரு சமயம் சென்னை பூக்கடை மல்லீசுவரர் கோயிலில் நான் விரிவுரை செய்து கொண்டிருக்கும் போது சின்னையா பிள்ளை அங்கு வந்தார். அவர் “வாரியார் வடலூர் திருப்பணியை நேர்மையாக நடத்தி முடித்தார். 400 பக்கத்தில் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.அந்தப் புத்தகத்தை அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன். அது பற்றி குற்றம் குறை இதுவரை எவரும் கூறவில்லை. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நேரிசை வெண்பா
என்றும் மறவேன் இடர்பலவும் நீக்கியே
குன்று தனைப்பிளந்த கோமானே!-நன்று
வடலூர் திருப்பணியை மாண்புடனே பூர்த்தி செய்த
நடலூர் அருள்திறத்தை நான்.
[திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதி, தில்லை திருப்புகழ்ச்சபை (சிதம்பரம்) 1979 இல் வெளியிட்ட "வாரியார் வாழ்க்கை வரலாறு" எனும் நூலிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டது.]

Thursday 10 January 2013

Books That Have Made History: Books That Can Change Your Life :

Tamil classic Literature
No.Book TitleAuthorDownload PDF Tamil book
1ThirukkuralThiruvalluvarFree Tamil eBooks
2AtthichudiAvvaiyarFree Tamil eBooks
3Kondrai VenthanAvvaiyarFree Tamil eBooks
4MuthuraiAvvaiyarFree Tamil eBooks
5Nal VaziAvvaiyarFree Tamil eBooks
6Ulaga NeethiUlaga NatharFree Tamil eBooks
7Abirami AnthathiAbirami PattarFree Tamil eBooks
8Abirami Anthathi with commentary / meaningAbirami Pattar
Kannadasan
Free Tamil eBooks
9Bharathiar SongsC. Subramanya BharathiarFree Tamil eBooks
10Bharathiar Songs - 2C. Subramanya BharathiarFree Tamil eBooks
11Bharathiar Songs - 3C. Subramanya BharathiarFree Tamil eBooks
12Kannan PattuC. Subramanya BharathiarFree Tamil eBooks
13Kuyil PattuC. Subramanya BharathiarFree Tamil eBooks
14Panchali SapathamC. Subramanya BharathiarFree Tamil eBooks


.

மறுபக்கத்தின் மறுபக்கம்

ஜோ .தமிழ்செல்வன்
Free Tamil eBooks      


Tamil Novels
No.Book TitleAuthorDownload
1Kurinji MalarParthasarathyFree Tamil eBooks
2Ponniyin Selvan Part 01Kalki KrishnamurthyFree Tamil eBooks


Part - 02Free Tamil eBooks


Part - 03Free Tamil eBooks


Part - 04Free Tamil eBooks


Part - 05Free Tamil eBooks


Part - 06Free Tamil eBooks


Part - 07Free Tamil eBooks


Part - 08Free Tamil eBooks


Part - 09Free Tamil eBooks


Part - 10Free Tamil eBooks


Part - 11Free Tamil eBooks


Part - 12Free Tamil eBooks
3Ponniyin Selvan (English)Kalki Krishnamurthy
Indra Neelameggham
Free Tamil eBooksPart 1
Free Tamil eBooksPart 2
Free Tamil eBooksPart 3
Free Tamil eBooksPart 4
4Sivagamiyin sabathamKalki KrishnamurthyDownload
5Alai OsaiKalki KrishnamurthyFree Tamil eBooksPart 1
Free Tamil eBooksPart 2
Free Tamil eBooksPart 3
Free Tamil eBooksPart 4
6Parthiban KanavuKalki KrishnamurthyFree Tamil eBooksPart 1 - 2
Free Tamil eBooksPart 3
7Solaimalai ilavarasiKalki KrishnamurthyFree Tamil eBooks
8Thiyaga bhoomiKalki KrishnamurthyFree Tamil eBooks
9Amma mandapamSujathaFree Tamil eBooks
10ArangetramSujathaFree Tamil eBooks
11ArisiSujathaFree Tamil eBooks
12CurfewSujathaFree Tamil eBooks
13EldoradoSujathaFree Tamil eBooks
14Eppadiyum vazhalamSujathaFree Tamil eBooks
15Film utsavSujathaFree Tamil eBooks
16IlaneerSujathaFree Tamil eBooks
17JannalSujathaFree Tamil eBooks
18KaalgalSujathaFree Tamil eBooks
19KaaranamSujathaFree Tamil eBooks
20NagaramSujathaFree Tamil eBooks
21Andhima kaalamKarthikesuFree Tamil eBooks


Tamil short stories
No.Book TitleAuthorDownload
1Short storiesSujathaFree Tamil eBooks
2Short storiesAkilanFree Tamil eBooks
3Short StoriesK V JagannathanFree Tamil eBooks
4Short StoriesJeyakanthanFree Tamil eBooksPart 1
Free Tamil eBooksPart 2
Free Tamil eBooksPart 3


To learn Tamil Language
No.Book TitleAuthorDownload
1Learn Tamil alphabets through EnglishYogarajaFree Tamil eBooks
2Tamil writing practice bookYogarajaFree Tamil eBooks
3ல, ள, ழ / ர, ற / ந, ண, ன - வேறுபாடுகள்NasanFree Tamil eBooks
4Practical TamilGanapathyFree Tamil eBooks
5தமிழ் உவமைகள் | Tamil simili
Free Tamil eBooks
6தமிழ் மரபுத்தொடர்கள் | Tamil idioms
Free Tamil eBooks


Tamil grammar books
No.Book TitleAuthorDownload
1Tamil GrammarThirumuruganFree Tamil eBooks
2Tamil GrammarThirumuruganFree Tamil eBooks
3Tamil GrammarPonniahFree Tamil eBooks
4Tamil GrammarNavalarFree Tamil eBooks
5Tamil Grammar | தமிழ் இலக்கணம்MuthukumaranFree Tamil eBooks
6TholkappiamTholkappiarFree Tamil eBooks


Tamil Dictionaries and glossaries
No.Book TitleAuthorDownload
1Tamil Lexicon | தமிழ் அகராதிGnanaprakasarFree Tamil eBooks
2Dictionary of Tamil terms for Administration
Free Tamil eBooks
3Names of birds in TamilRathnamFree Tamil eBooks
4Tamil-Tamil dictionaryNatarajanFree Tamil eBooks
5வடசொல் - தமிழ் அகராதிNilambikaiFree Tamil eBooks


Other language dictionaries
No.Book TitleAuthorDownload
1Sanskrit to English dictionary
Free Tamil eBooks210 MB
2English to Hindi dictionary
Free Tamil eBooks
3Hindi technical dictionary
Free Tamil eBooks
4English to Telugu dictionary
Free Tamil eBooks
5English to Malay dictionary
Free Tamil eBooks
6Malay phrases
Free Tamil eBooks
7Tamil to Sinhala Dictionary
Free Tamil eBooks
8Dutch to Tamil Dictionary
Free Tamil eBooks


To learn English through Tamil Language
No.Book TitleAuthorDownload
1Learn English through TamilSivarajasingamFree Tamil eBooks
2Learn English through TamilNihalFree Tamil eBooks


Tamil Culture and Religion
No.Book TitleAuthorDownload
1Tamil proverbs with English meaningRev. Herman JensenFree Tamil eBooks
50.9MB
2Tamil proverbs with meaningThuraisingamFree Tamil eBooks
3Tamil Traditions
Free Tamil eBooks
4Hindu Temples and sculpturesPadmanabanFree Tamil eBooks
5Bharata natyam - Nattiyakkalai vilakkamYoki Cuttananta ParatiyarFree Tamil eBooks


Hindu vedic religious scriptures / texts
No.Book TitleAuthorDownload
1Swami Vivekanandar Stories
Free Tamil eBooks
2Swami Vivekananda Chicago speech in Tamil
Free Tamil eBooks
3Complete works of Swami Vivekananda
Free Tamil eBooks
4Manthras
Free Tamil eBooks
5Vinayagar agavalAvvaiyarFree Tamil eBooks
6Kanda Shasti Kavasam
Free Tamil eBooks
7Kanda Shasti Kavasam (English)
Free Tamil eBooks
8Shanmuga KavasamSri Pamban Kumaraguruthasa SwamigaLFree Tamil eBooks
9Kama Sutra of Vatsyayana (English)
Free Tamil eBooks
10Yoga Vasistam in Tamil
Free Tamil eBooks
11Yoga Sutra of Maharishi Patanjali with commentary in English
Free Tamil eBooks
12Bhagavad Gita by Bharathiar in Tamil
Free Tamil eBooks
13Bhagavad Gita with commentary in Tamil
Free Tamil eBooks
14Bhagavad Gita in English with the commentary of Sri Sankaracharya
Free Tamil eBooks
21.2MB


Christine religious scriptures / texts
No.Book TitleAuthorDownload
1Bible in Tamil - Old Testament (Pazhiya Yerpaadu)
Free Tamil eBooks
2Bible in Tamil - New Testament (Pudhiya Yerpaadu)
Free Tamil eBooks


Islamic religious scriptures / texts
No.Book TitleAuthorDownload
1Holy Quran in Tamil
Free Tamil eBooks
2Holy Quran in Tamil and Arabic
Free Tamil eBooks


Family
No.Book TitleAuthorDownload
1Tamil baby names
Free Tamil eBooks
2Tamil baby namesArasezilFree Tamil eBooks
3Child psychology and EducationJeyarajaFree Tamil eBooks


Health, Yoga
No.Book TitleAuthorDownload
1Learn Yogasanas (English)IyengarFree Tamil eBooks
2A practical guide to Yoga (English)Deepak ChopraFree Tamil eBooks
3Body weight controlDr. MuruganandanFree Tamil eBooks


Medicine, Siddha, Ayurveda
No.Book TitleAuthorDownload
1Siddha herbal medicineDr. Kasi PitchaiFree Tamil eBooks
2Siddha herbs
Free Tamil eBooks
3Mooligai Marmam
Free Tamil eBooks
4Charaka Samhita
Free Tamil eBooks
5History of Ayurveda
Free Tamil eBooks


Vedic astrology, Jyotish, Jothidam
No.Book TitleAuthorDownload
1Numerology in TamilSivarajaFree Tamil eBooks
2Speed palmistry (English)
Free Tamil eBooks
3Learn vedic astrology - Part 1 (English)
Free Tamil eBooks
4Learn vedic astrology - Part 2 (English)
Free Tamil eBooks



TamilCube welcomes you to the world of Tamil Mobile eBooks! You can download the following eBooks (Tamil books) into any of your mobile devices with Java support, such as mobile phone, PDA, iPhone and Blackberry.
Just follow the simple steps below:
1. Download the jar file for the Tamil book you like, into your PC.
2. Connect your Mobile phone, PDA, iPhone and Blackberry to the PC and transfer the jar file to your mobile. (This method is the same as how you download games or applications to your mobile phone.) Now you are ready to enjoy reading Tamil eBooks from your mobile phone, anytime and anywhere!
No.Book TitleAuthorDownload software
1Thirukkural திருக்குறள்Thiruvalluvar திருவள்ளுவர்Download
2Atthichudi ஆத்திசூடிAvvaiyar ஒளவையார்Download
3Kondrai Venthan கொன்றை வேந்தன்Avvaiyar ஒளவையார்Download
4Muthurai மூதுரைAvvaiyar ஒளவையார்Download
5Nal Vazi நல்வழிAvvaiyar ஒளவையார்Download
6Ulaga Neethi உலகநீதிUlaga Nathar உலகநாதர்Download
7Abirami Anthathi அபிராமி அந்தாதிAbirami Pattar அபிராமி பட்டர்Download

  • You can download TamilCube's Modern Tamil, Hindi and Malay mobile dictionaries to your mobile phone from here.
  • You can download the above books and many other eBooks in various topics in PDF format here.

Mobile Tamil eBooks
Do you want to send SMS in Tamil? Its is absolutely free, and no subscription required. Finally, here is an excellent mobile SMS software that helps Tamil community to keep in touch using their beloved language at no cost. Please take note that in order to read the SMS messages in Tamil, your recipients must also have this SMS software in their phones. You can download the Tamil SMS software from here.


இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி  E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்
New
———————————————————

சமையல் குறிப்புகள்